உருவாகும் புதிய மாவட்டங்கள் – எண்ணிக்கை 50 ஆக உயர்வு.. மாநில அரசின் புதிய நடவடிக்கை!
ராஜஸ்தான் மாநிலத்தில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் சட்டசபையில் அறிவித்துள்ளார். இதனை அடுத்த மாநிலத்தில் மொத்த மாவட்டங்கள் எண்ணிக்கை உயர உள்ளது.
புதிய மாவட்டங்கள்:
ராஜஸ்தான் மாநிலத்தில் நடப்பு ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மாநிலத்தில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். இதனையடுத்து நகரின் முக்கிய பகுதிகளை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க அரசு சார்பில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு தனது இறுதி அறிக்கையை முதல் மந்திரியிடம் சமர்ப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் தற்போது ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் தற்போது நான்கு சிறிய மாவட்டங்களாக பிரிக்கப்பட உள்ளது. அதாவது வடக்கு ஜெய்ப்பூர், தெற்கு எனவும் கொத்புத்லி, ஆல்வார் பகுதிகள் பெஹ்ரோர் உடன் இணைக்கப்பட்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுத 3 நாட்கள் பள்ளிக்கு வந்தால் போதும்? கல்வித்துறை அமைச்சரின் விளக்கம்!
அரசின் இந்த நடவடிக்கையால் தற்போது ராஜஸ்தானில் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் இத்தகைய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.