தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு? -வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!!
தமிழகத்தில் பொதுவாக ஏப்ரல் மாத இறுதி மற்றும் மே மாதத்தில் தான் அதிகபட்ச வெப்பநிலை நிலவும். ஆனால் நடப்பு ஆண்டில் மார்ச் மாத தொடக்கத்தில் இதே அதிக வெப்பநிலை நிலவி வருகிறது. இதனால் இன்னும் கோடையை நெருங்க நெருங்க வெப்பநிலை அதிகரிக்கும் என்ற அச்சம் மக்களிடையே உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் நேற்று அதிகபட்ச வெப்பநிலையாக சென்னையில் 100 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.
‘நாட்டா’ நுழைவுத்தேர்வில் புதிய தளர்வுகள் – AICTE அறிவிப்பு!!
வானிலை அறிவிப்பு:
வங்க கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம், “தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமானை ஒட்டியுள்ள பகுதிகளில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறுவதற்கு வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இதனால் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். மேலும், காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் நேரடியாக மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்