தமிழகத்திற்கு டிசம்பர் 9ம் தேதி RED ALERT.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? வெளியான முக்கிய தகவல்!
வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்திற்கு டிசம்பர் 9 ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Red Alert:
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது வரை பரவலாக பெய்து வருகிறது. வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுவடைந்துள்ளது. இது நாளை மறுநாள் (டிச.08) வட தமிழகம் மற்றும் புதுவையொட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவ கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இதனால் டிச.07 தஞ்சாவூர், கடலூர், திருவாரூர்,புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே போல டிசம்பர் 8ம் தேதி சென்னை, திருவள்ளூர்,நாகப்பட்டினம் உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இது புயலாக மாறினால் இதற்கு மாண்டஸ் என பெயரிடப்படவுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் மனநல சிக்கல்களை தீர்க்க புது App – TCS நிறுவனத்தின் முயற்சி!
Exams Daily Mobile App Download
மேலும் வரும் 9 ஆம் தேதியான வெள்ளிக்கிழமை மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அடுத்த 3 நாட்களுக்கு பெய்யவுள்ள தொடர் மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.