மாநிலத்தில் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கம் – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
ஹரியானா மாநிலத்தில் கொரோனா தொற்றின் புதிய பாதிப்புகள் குறைந்து வருவதால், அனைத்து கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
ஊரடங்கு நீக்கம்
நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றின் வேகம் குறைந்து வந்ததையடுத்து பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான ஹரியானா அரசாங்கமும், மாநிலம் முழுவதும் விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஹரியானா அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதல்களின் படி, ‘தற்போது மாநிலத்தில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படுகின்றன.
அண்ணா பல்கலை இன்ஜினியரிங் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – செமஸ்டர் தேர்வு தேதி வெளியீடு!
அந்த வகையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து அமலில் இருக்கும் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி, தனியார் அலுவலகங்கள் உட்பட அனைத்து அலுவலகங்களையும் முழு திறனுடன் செயல்பட மாநில அரசு அனுமதித்துள்ளது. அதனால் ஹரியானா அரசு வழங்கிய முந்தைய வழிகாட்டுதல்கள் பிப்ரவரி 15 வரை மட்டுமே அமலில் இருக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஹரியானாவில் நேற்று (பிப்.16) ஒரு நாள் மட்டும் 922 கொரோனா புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
அதே போல உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஹரியானா மாநிலத்தில் தற்போதுள்ள கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை 5,487 என்று மாநில சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், கொரோனா 3ம் அலைப்பரவல் காரணமாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் விதிக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.