நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!
நாளை முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கின்றது. இந்நிலையில் நாளை முதல் சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதியில்லை என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா பரவல்
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு உச்சத்தினை அடைந்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 21 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அது போல் 144 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக தமிழக அரசு பல கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதே போல் புதிதாக சில அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் எம்சிஏ, எம்பிஏ மாணவர் சேர்க்கை – உயர்கல்வித்துறை அதிகாரி விளக்கம்!!
இதன்படி, நாளை முதல் பேருந்துகளில் 50 சதவீத மக்கள் மட்டுமே செல்ல வேண்டும். அதே போல் நாளை முதல் 12 மணி வரை மட்டுமே மருந்தகங்கள், மளிகை கடைகள் மற்றும் பலசரக்கு கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்படியாக இருக்க, தற்போது புதிதாக பொதுமக்கள் புறநகர் ரயில்களில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அத்தியாவசிய பணியாளர்கள், ரயில்வே ஊழியர்கள், முன்கள பணியாளர்களாக காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் மட்டுமே ரயிலில் செல்ல அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்