மே 4 முதல் இந்தியர்கள் வருகைக்கு தடை – அமெரிக்கா அறிவிப்பு!!
கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக வரும் 4 ஆம் தேதி முதல் இந்தியாவிலிருந்து, அமெரிக்காவுக்கு செல்லும் பயணிகளுக்கு தடை விதித்து அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
பயணிகள் தடை
இந்தியாவில் பெருகி வரும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல நாடுகளில் இந்திய பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் இந்திய விமானங்களும் தடை செய்யப்பட்டது. அதன்படி கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு செல்லும் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு செல்லும் இந்திய பயணிகளுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
தமிழக தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் ஒதுக்கீடு – புதிய அரசாணை வெளியீடு!!
அதே நேரத்தில் அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் குடியுரிமை பெற்ற இந்தியர்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் உள்ள அமெரிக்கர்கள் நாடு திரும்பும் படி அமெரிக்க அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் வரும் மே மாதம் 4 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
TN Job “FB Group” Join Now
தொடர்ந்து இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்பவர்களுக்கு மேலும் பல புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. முன்னதாக கொரோனா இரண்டாம் அலைக்கு எதிராக போராடி வரும் இந்தியாவுக்கு, அமெரிக்க அரசு உதவிக்கரம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதனடிப்படையில் 100 மில்லியன் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை அமெரிக்க அரசு, இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.