தமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்? ஓமைக்ரான் பரவல் எதிரொலி!!

0
தமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்? ஓமைக்ரான் பரவல் எதிரொலி!!
தமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்? ஓமைக்ரான் பரவல் எதிரொலி!!
தமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்? ஓமைக்ரான் பரவல் எதிரொலி!!

அடுத்த தாக்குதலாக பரவி வரும் ஓமைக்ரான் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழ்நாட்டில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஓமைக்ரான் :

இந்தியாவில் அடுத்த தாக்குதலாக ஓமைக்ரான் வைரஸ் தொற்று பரவ தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் மீண்டும் அச்சம் அதிகரித்துள்ளது. தென்னாபிரிக்காவில் இருந்து இந்தியா வந்த கர்நாடகாவை சேர்ந்த 2 பேருக்கு ஓமைக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களிலும் பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஓமைக்ரான் பரவி வருகிறது. இதனால் தமிழகத்திலும் பரவ வாய்ப்புள்ளதால் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து மாவட்ட நிர்வாகங்கள் பல கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது.

Jio நிறுவனத்தின் Disney+ Hotstar மொபைல் ப்ரீபெய்ட் திட்டங்கள் திருத்தம் – முழு விவரம் இதோ!

அதன் படி கொரோனா தடுப்பூசி செலுத்தாத மக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டு வருகிறது. லண்டன், சிங்கப்பூர், இத்தாலி, ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட 44 நாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்தாக கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் இருந்து வருவோருக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க அரசு ஆலோசித்து வருகிறது.

தமிழகத்தில் நாளை (டிச.9) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பரவி வரும் ஓமைக்ரான் தொற்று அதிக வேகத்துடன் பரவும் தன்மை கொண்டது. இதனால் இந்தியாவில் மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்த நிலையை கருத்தில் கொண்டு பொது மக்கள் அலட்சியம் காட்டாமல் தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும் தமிழகத்தில், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால், தமிழக அரசு கவனமுடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!