ஜூன் 16 ஆம் தேதிக்கு பிறகு புதிய கட்டுப்பாடுகள் – நாளை முக்கிய அறிவிப்பு!

0
ஜூன் 16 ஆம் தேதிக்கு பிறகு புதிய கட்டுப்பாடுகள் - நாளை முக்கிய அறிவிப்பு!
ஜூன் 16 ஆம் தேதிக்கு பிறகு புதிய கட்டுப்பாடுகள் - நாளை முக்கிய அறிவிப்பு!
ஜூன் 16 ஆம் தேதிக்கு பிறகு புதிய கட்டுப்பாடுகள் – நாளை முக்கிய அறிவிப்பு!

கேரளாவில் தற்போதுள்ள விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து ஜூன் 16 ஆம் தேதிக்கு பிறகு சில தளர்வுகளை அளிப்பது குறித்து நாளை (ஜூன் 15) அறிவிப்பு வெளியாகும் என முதல்வர் பினராயி விஜயன் தகவல் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்

கொரோனா 2 ஆம் அலை எதிரொலியாக கேரளா மாநிலத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மே மாதம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு காரணமாக தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 7,719 புதிய பாதிப்புகள் மற்றும் 161 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

10 நிமிடங்களில் பான் கார்டு பெறுவது எப்படி- வழிமுறைகள் இதோ !!

இந்த நிலையில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிப்பது மற்றும் தளர்வுகளை அளிப்பது குறித்த அறிவிப்பு இன்று (ஜூன் 15) வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு மாவட்ட வாரியாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்க கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் கடலோர மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கேரளாவில் மொத்த மக்கள் தொகையில் 26.2% பேருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியும், 6.61% பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை மொத்தம் 1,09,61,670 டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!