ஆகஸ்ட் 24 வரை முழு ஊரடங்கு அமல் – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
உத்தரகண்ட் மாநிலத்தில் தற்போது பதிவு செய்யப்பட்டு வரும் புதிய கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு
உத்தரகாண்டில் மாநிலத்தில் கொரோனா புதிய பாதிப்புகளின் விகிதம் குறைந்து வருகின்ற போதிலும், முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பதாக முதல்வர் புஷ்கர் சிங் தமி தலைமையிலான மாநில அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் இந்த ஊரடங்கு காலத்தில் எவ்வித கூடுதல் தளர்வுகளும் கொடுக்கப்படவில்லை. அந்த வகையில் புதிய கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 17 ஆம் தேதி காலை 6 மணி முதல் ஒரு வாரத்திற்கு அமல்படுத்தப்பட உள்ளது.
ஆகஸ்ட் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
எனினும் இந்த ஊரடங்கு உத்தரவின் போது தடுப்பூசிகளை செலுத்தும் பணிகள் தொடரும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக உத்தரகண்ட் மாநில அரசு முழு ஊரடங்கு உத்தரவை ஆகஸ்ட் 17 வரை நீட்டித்து கடந்த வாரத்தில் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 16 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது.
TN Job “FB Group” Join Now
இருப்பினும் அம்மாநிலத்தில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 16) முதல் 6 லிருந்து 8 வரையுள்ள வகுப்புகளுக்கான பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.