கொரோனா வைரஸின் புதிய திரிபு – ஆய்வகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! அச்சத்தில் மக்கள்!
கொரோனா வைரஸ் தொற்றானது தொடர்ந்து உருமாற்றமடைந்து வருகிறது. அந்த வகையில் தற்போது உருவாகும் கொரோனா திரிபு மிகவும் ஆபத்தானதாக இருக்கக் கூடும் என்று தென்னாபிரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வின் தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா திரிபு
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றானது இன்னும் ஓய்ந்த பாடில்லை. இந்த வைரஸ் தொற்றானது தொடர்ந்து உருமாற்றம் அடைந்து அதிக வீரியத்துடன் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு விதிக்கப்பட்ட போதிலும் நோய் தடுப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்றி வந்தாலும் கொரோனாவிலிருந்து இன்னும் மீண்டு வர முடியவில்லை.
ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் போலி ரிவ்யூ – மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை!
டெல்டா வைரஸ், ஒமிக்ரான், பிஏ என்று கொரோனா வைரஸ் ஆனது தொடர்ந்து உருமாற்றமடைந்து வருகிறது. இந்த நிலையில் தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களிடமிருந்து கொரோனா மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் உருவாகும் கொரோனா திரிபு கடுமையாக இருக்கும் என்று ஆய்வகம் தகவல் தெரிவித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த புதிய திரிபு கடுமையான உடல் பாதிப்பை ஏற்படுத்தும் மேலும் உயிரிழப்புகளை அதிகப்படுத்தும் என்றும் ஆய்வின் தகவல்கள் தெரிவிக்கிறது. ஏற்கனவே சீனாவில் மீண்டும் பாதிப்புகள் அதகிகரித்து வருகிறது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா ஆய்வகம் வெளியிட்ட ஆய்வின் தகவல்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.