மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் புதிய கட்டுப்பாடுகள் – இன்று முதல் அமல்!!

0
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் புதிய கட்டுப்பாடுகள் - இன்று முதல் அமல்!!
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் புதிய கட்டுப்பாடுகள் - இன்று முதல் அமல்!!
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் புதிய கட்டுப்பாடுகள் – இன்று முதல் அமல்!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவில்களில் பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கோவில்களில் கட்டுப்பாடுகள்:

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. அதில் கோவில் விழாக்கள், மத கூட்டங்கள் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் 8 மணிக்கு மேல் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் தெரிவித்ததாவது, ‘தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஏற்கனவே இருந்த வழிகாட்டுதல் முறைகளோடு தமிழக அரசின் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதன் படி இன்று (15-04-2021) முதல் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் சன்னதி கிழக்கு நுழைவாயில் வழியாக கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர். 100 ரூபாய் மற்றும் 50 ரூபாய் சிறப்பு தரிசன கட்டணச்சீட்டு பெறும் பக்தர்கள் தெற்கு கோபுர நுழைவு வாயிலில் அனுமதிக்கப்படுவர். மேற்கு மற்றும் கிழக்கு நுழைவு வாயில்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்கு உட்பட்டவர்கள் கோவிலுக்கு வர அனுமதி கிடையாது.

வார இறுதி நாட்களில் ஊரடங்கு – அரசு திட்டம்!!   

செல்போன், தேங்காய், பழம், பூ ஆகியவை கொண்டுவர அனுமதி இல்லை. பொது தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் அம்மன் சன்னதி கிழக்கு வாயிலாக வந்து, அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம், இருட்டு மண்டபம், பொன் தாமரைக்குளத்தின் கிழக்குப்பகுதி, தெற்குப்பகுதி, கிளிக்கூண்டு மண்டபம், கொடி மரம் வழியாக அம்மன் சன்னதிக்குள் நுழையலாம். அதேபோல கட்டண தரிசனம் செய்பவர்கள் தெற்கு வாயிலாக நுழைந்து கொடிமரம் வழியாக அம்மன் சன்னதிக்கு வரலாம். தரிசனம் முடித்தவர்கள் சனீஸ்வரர் சன்னதி அக்னி வீரபத்திரர், அகோர மண்டபம் வழியாக நுழைந்து அம்மன் சன்னதி கிழக்கு வாசல் வழியாக வெளியேறலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!