இந்தியாவில் ஒரே நாளில் 3.32 லட்சம் பேருக்கு கொரோனா – 2,263 பேர் உயிரிழப்பு!!
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 3.32 லட்சம் பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் மிரளும் வகையில் இந்த பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த ஒரு நாளில் மட்டும் 3.32 லட்சம் பேர் நோய் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். உலக அளவில் நோய்த்தொற்றால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
TN Job “FB Group” Join Now
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இறப்பு எண்ணிக்கை, குணமடைந்தோர் விகிதம் ஆகிய விவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின் படி,
தமிழகத்தில் மே 1 முதல் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் – அரசு அறிவிப்பு!!
- நேற்று ஒரே நாளில் 3,32,730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- இதன் மூலம் கொரோனா மொத்த பாதிப்பு 1,62,63,695 ஆக அதிகரித்துள்ளது.
- நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு 2,263 பேர் பேர் பலியாகியுள்ளனர்.
- இதனால் இறப்பு எண்ணிக்கை 1,86,920 ஆக உயர்ந்துள்ளது.
- கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 1,93,279 பேர் குணமடைந்துள்ளனர்.
- அதன்படி நாடு முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,36,48,159 ஆக அதிகரித்துள்ளது.
- தற்போது வரை நோய் பாதிப்புக்கு உள்ளாகி 24,28,616 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
- நாடு முழுவதும் 13,54,78,420 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.