அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கான புதிய படிப்பு – விரைவில் அறிமுகம்!
பாரம்பரிய சித்தா சிகிச்சை முறையை ஊக்குவிக்கும் நோக்கில் அண்ணா பல்கலைக்கழகம் சித்த மருத்துவ சான்றிதழ் படிப்பை ஆன்லைன் வழியாக தொடங்க திட்டமிட்டுள்ளது. மேலும், இதற்கான பாடத்திட்டங்கள் கூடிய விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்தா மருத்துவ படிப்பு:
உலகம் முழுவதும் பாரம்பரிய சித்தா மருத்துவ சிகிச்சை முறைகளை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு செயல்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதாவது, சித்த மருத்துவத்தின் மூலமாக உடலை குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஆன்மாவையும் வலுப்படுத்த முடியும். கடந்த இரண்டு வருடமாகவே மக்கள் சித்தா மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். அதாவது, எந்தவித பக்கவிளைவும் இல்லாமல் உடலை வலுப்படுத்துவதால் சித்தா மருத்துவ சிகிச்சை முறையை மேற்கொள்ள விரும்புகின்றனர்.
Exams Daily Mobile App Download
மேலும், சித்த மருத்துவத்தை தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரபலப்படுத்துவதற்கான வேலைப்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், பாரம்பரிய சித்தா சிகிச்சை முறையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அண்ணா பல்கலைக்கழகம் சித்த மருத்துவ ஆன்லைன் சான்றிதழ் படிப்பை தொடங்க முடிவெடுத்துள்ளது. இந்த சான்றிதழ் படிப்பிற்காக தேசிய சித்த மற்றும் மருத்துவமனை நிறுவனத்துடன் அண்ணா பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்துள்ளது.
தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு? அமைச்சர் சுப்ரமணியன் விளக்கம்
மேலும், சித்த மருத்துவ ஆன்லைன் படிப்பிற்கான பாடத்திட்டம் குறித்து 15 நாட்களுக்குள் ஒப்பந்தம் செய்யப்படும் எனவும், இரண்டு மாதங்களுக்குள் பாடநெறி வெளியிடப்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பாடத்திட்டத்தை 40 – 45 மணி நேரத்தில் முடிக்கும் வகையில் உள்ளடக்கம் தயாரிக்கப்படும் எனவும், ஆன்லைன் வழியாகவே வெளிநாட்டு மாணவர்களுக்கும் சித்தா பற்றிய அறிவை வழங்க முடியும் எனவும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.