தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல்? – முக்கிய எச்சரிக்கை!
உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு புதிய வகை கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாகவும் ஜூன் மாத இறுதிக்குள் இந்த வைரஸ் உச்சகட்டத்தை எட்டி இருக்கும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கொரோனா வைரஸ்
சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு பரவத் துவங்கிய கொரோனா தொற்று தற்போது வரைக்குமே முழுவதுமாக ஒழிக்கப்பட முடியாமல் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மேலும், இந்தியாவில் தற்போது வரைக்குமே தினமும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பலனின்றி பலரும் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், தற்போது மீண்டும் சீனாவில் இருந்து சாதாரண கொரோனா வைரஸை விட மிகப்பெரிய அளவில் பரவக்கூடிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
Air India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!
அதாவது, இந்த புதிய வகை கொரோனா அலை வரும் ஜூன் மாத இறுதிக்குள் சீராவில் உச்ச கட்டத்தை எட்டி இருக்கும் எனவும், இந்த தொற்றால் சீனாவில் பலர் உயிரிழக்க நேரிடலாம் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த, அறிவிப்பு உலகம் முழுவதுமே உள்ள பொதுமக்களின் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டு வருவதாகவும் சுகாதார மையம் அறிவித்திருக்கிறது.