அதிவேகமாக பரவும் ஓமைக்ரான் வைரஸின் உருமாற்றம் அடைந்த BA 2 – அச்சத்தில் பொதுமக்கள்!
ஓமிக்ரான் வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த B A 2 எனும் வைரஸ் உருவாகியுள்ளது. மிக வேகமாக பரவக் கூடியது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. டெல்டா மற்றும் ஓமிக்ரான் வைரஸ் தொற்றை விட இது ஆபத்தானது என்று கூறப்படுகிறது.
B A 2 வைரஸ்:
கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் இருந்து கொரோனா என்னும் உயிர்கொல்லி வைரஸ் மனிதர்களுக்கு பரவ தொடங்கியது. இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதாக பரவும் தன்மையை கொண்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கைகள் எதிர்பாராத அளவு உயர்ந்தது. அதனை தொடர்ந்து இந்த கொரோனா வைரஸ் பல நாடுகளிலும் பரவ தொடங்கியது. மேலும் கொரோனா வைரஸ் மேலும் உருமாற்றம் அடைய தொடங்கியது. அந்த வகையில் கொரோனா வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த டெல்ட்டா பிளஸ் வகை வைரஸ் உலக நாடுகளையே ஆட்டி படைத்தது.
பிப்ரவரி 21 முதல் பள்ளிகள் திறப்பில் புதிய மாற்றங்கள், சீருடை கட்டாயமில்லை – மாநில அரசு முடிவு!
பாதிப்பு எண்ணிக்கையை கட்டுப்படுத்த நாட்டு அரசுகள் செய்வதறியாமல் திகைத்தனர். அதன் தொடர்ச்சியாக ஓமிக்ரான் வைரஸ் தொற்று பரவ தொடங்கியது. இந்த ஒமைக்ரானில் இதுவரை 53 உருமாற்ற வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் பிஏ 1, பிஏ 2 மற்றும் பிஏ 3 போன்ற வைரஸ் மிக முக்கியமாக கருதப்படுகிறது. இந்த பிஏ 2 வைரஸ் மிக வேகமாக பரவக் கூடியது என்று உலக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. ஆனால் ஜப்பான் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பின்படி இது தவறானது என்று கூறுகின்றனர்.
தமிழகம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்? அரசுத்துறை வட்டாரங்கள் பரபர தகவல்!
அதனால் இந்த ஆய்வு மதிப்பாய்வு செய்யப்படவில்லை. இந்த நிலையில் தற்போது பரவி வரும் B A 2 வைரஸ் தனித் தோற்றம் எதுவும் இல்லை. மேலும், பி ஏ 2 வகை ஒமைக்ரான் வைரஸ், டெல்டா வைரசை விட வீரியமானது என்று டோக்கியோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நுரையீரலை அதிகம் பாதிக்கும். இந்த வைரஸ் தடுப்பூசி எதிர்ப்பு சக்தியையும் மீறி உடலை தாக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.