தமிழகத்தில் தியேட்டர்கள், மால்கள் மூடல்? புதிய கட்டுப்பாடுகள் வெளியாக வாய்ப்பு!
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக தற்போது இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தியேட்டர்கள், மால்கள் மூடல் போன்ற புதிய கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
புதிய கொரோனா கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இதன் காரணமாக பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைள் அமலில் இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊரடங்கின் பொழுது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இருந்தும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இதன் காரணமாக மேலும் சில புதிய கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளது. அதன்படி ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் பெரிய கடைகளை மூட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதேபோல் வழிபட்டு தளங்களில் பக்தர்கள் அனுமதிக்கு ரத்து செய்யக்கூடும்.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை ஆன்லைன் கல்வி – பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!!
தற்போது விதிக்கப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கின் நேரமும் மாற்றப்படும் என்றும் முழு ஊரடங்கை ஞாயிற்று கிழமைகளில் மட்டுமல்லாமல் மேலும் சில நாட்களில் அமல்படுத்த வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமல்லாமல் பணி நேர குறைப்பு, பணியாட்கள் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு, வீட்டில் இருந்து பணிபுரிபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற பல கட்டுப்பாடுகளை அறிவிக்க வாய்ப்புள்ளது. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்று மாலை வெளியாகவுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றது.