மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள் போன்ற அனைத்தும் ஆகஸ்ட் 16ம் தேதி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த கட்டுப்பாடுகள் வரும் ஆகஸ்ட் 23 ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
நேர கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் தொற்று முழுமையாக குறைந்தபாடில்லை. குறிப்பாக ஈரோடு, கோவை, சேலம், சென்னை ஆகிய மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது.
ஆகஸ்ட் 23 ல் பள்ளிகள் திறப்பு உறுதி – கர்நாடக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!
இதனால் அந்த மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கையாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. கடைகள் செயல்படும் நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதிக மக்கள் கூடும் இடங்களில் இயங்கும் கடைகள், டாஸ்மாக் கடைகள் போன்றவைகள் இயங்க மாவட்ட நிர்வாகங்கள் தடை விதித்துள்ளது. மேலும் கோவில்களில் பக்தர்கள் வழிபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மற்ற மாவட்டங்களை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்க வர்த்தக, வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், மாவட்ட காவல் களப்பணியாளர் ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பிறகு நேர கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி . கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள் ஆகியவை மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.