தமிழகத்தில் அமலாகும் புதிய கொரோனா கட்டுப்பாடுகள்? பொதுமக்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. இதையடுத்து தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் சில கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அமல்படுத்தியுள்ளார்.
கொரோனா கட்டுப்பாடுகள்
இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டு வருகிறது. அத்துடன் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 9000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து கொண்டு வருவதால் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது.
Exams Daily Mobile App Download
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 600க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசுக்கு முன்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சில கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் மீண்டும் கோரத்தாண்டவமாடும் கொரோனா பாதிப்பு – ஷாக் ரிப்போர்ட்!
இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்டவை கட்டயாமாக பின்பற்ற வேண்டும். அத்துடன் வணிக வளாகங்களில் குளிர்சாதனம் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் திருமண நிகழ்வில் 100 பேர், இறப்பு நிகழ்வில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளார். இதே போல் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் தொற்று பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.