வார இறுதி ஊரடங்கு அமல், புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு – அரசு அறிவிப்பு!
டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் குறைந்து வருவதால் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளித்து பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான புதிய வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
தேசிய தலைநகர் டெல்லியில் வெள்ளிக்கிழமையான நேற்றைய நிலவரப்படி 10,756 பேருக்கு புதிதாக கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 38 பேர் நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் டெல்லியில் நேர்மறை விகிதம் 18.04 சதவீதமாக குறைந்துள்ளது. மாநில சுகாதாரத்துறை அங்கு நோய் தொற்றின் பாதிப்பு உச்ச நிலையை கடந்துள்ள போதிலும், தொடர்ந்து அனைத்து கோவிட்-19 நெறிமுறைகளையும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவதை ஒட்டி, டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) சில கோவிட்-19 வழிகாட்டுதல்களை மாற்றியுள்ளது.
ஜனவரி 23 & 30 ஆகிய தேதிகளில் ஞாயிறு முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!
ஆணையத்தின் உத்தரவின் படி அனைத்து தனியார் அலுவலகங்களும் 50 சதவீத திறனுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் அடுத்த திங்கட்கிழமை காலை 5 மணி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகள் அனைத்தும் மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என்றும். நகரில் குறைந்து வரும் கோவிட் வழக்குகள் மற்றும் நேர்மறை விகிதம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு புதிதாக வெளியிடப்பட்ட கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
புதிய வழிகாட்டுதல்கள்:
- பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படும்.
- விளையாட்டு வளாகங்கள் மற்றும் நீச்சல் குளங்கள் மூடப்படும்.
- உணவகங்கள் மற்றும் பார்கள் திறக்கப்படாது. இருப்பினும், ஆன்லைன் டெலிவரி அனுமதிக்கப்பட்டுள்ளது.
- மெட்ரோ சேவைகள் மற்றும் பொதுப் போக்குவரத்து பேருந்துகள் முழு இருக்கை வசதியுடன் இயங்கும், ஆனால் நின்று செல்லும் பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- வார இறுதி ஊரடங்கு உத்தரவின் போது, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை கையாளும் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும்.
- சந்தைகள் மற்றும் மால்களில் உள்ள கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்படலாம்.
- கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே அமைந்துள்ள தனியார் அலுவலகங்கள் 50 சதவீத திறனில் செயல்படலாம்.
- திரையரங்குகள், ஸ்பாக்கள் மற்றும் ஜிம்கள் மூடப்பட்டிருக்கும்.
ஆனால் சாராயம் மற்றும் மதூ பானக் கடைகளுக்கு மட்டும் முழு அனுமதி! ஏனென்றால் அங்கே கோரானா நோய் தொற்று செல்லவே பயப்படும