தமிழகத்தில் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – ஓமைக்ரான் அச்சம் எதிரொலி!

0
தமிழகத்தில் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் - ஓமைக்ரான் அச்சம் எதிரொலி!
தமிழகத்தில் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் - ஓமைக்ரான் அச்சம் எதிரொலி!
தமிழகத்தில் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – ஓமைக்ரான் அச்சம் எதிரொலி!

தமிழத்தில் நேற்று முதல்முறையாக ஓமைக்ரான் தொற்று ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் தீவிரம்:

மொத்த உலகையும் அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தொற்று பல அதிர்ச்சியான விஷயங்களையும் கொண்டிருந்தது. அதாவது உருமாற்றம் செய்து கொள்ளும் தன்மை இந்த வைரஸிற்கு உள்ளது. இவ்வாறு மாற்றம் அடைந்த வைரஸ்கள் அனைத்தும் முன்னர் இருந்ததை விட தீவிரமாக பரவும் தனமை உடையதாக இருக்கிறது. அந்த வகையில், தென் ஆப்பிரிக்க நாட்டில் இருந்து தற்போது பரவ தொடங்கியுள்ள ஓமைக்ரான் வகை வைரஸ் கொரோனாவை விட 10 மடங்கு அதிக வீரியம் தன்மை கொண்டது. தற்போது ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் முதலில் கர்நாடகாவில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்? டிச.25 இல் ஆலோசனை! அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

இதனால் நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது. தமிழகத்தில் ஒருவருக்கு ஓமைக்ரான் வகை வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. நைஜீரியாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வநத நபருக்கு ஓமைக்ரான் உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் பொது இடங்களில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய செய்திக் குறிப்பில் நெல்லை மாவட்டத்தில் இதுவரை 49,715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்களில் 49,233 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 48 பேர் மட்டுமே சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்? டிச.25 இல் ஆலோசனை! அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து நிலைமை சீரடைந்து வருகின்றது. ஆனால் மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் மிகவும் கவனக்குறைவாக உள்ளனர். தற்போது பரவி வரும் ஓமைக்ரான் தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாகவும்,நோய் தடுப்பு நடவடிக்கையாகவும், இன்று முதல் நெல்லை மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து, சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று நெல்லை மாநகர காவல் ஆணையர் செந்தாமரை கண்ணன் உத்தரவிட்டுள்ளார். அரசின் உத்தரவுகளை கடைபிடிக்காத வணிக வளாகங்கள் அனைத்தும் சீல் வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இன்று மாலை முதல் கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத மக்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!