மே 31 வரை பயணிகள் விமான போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!!

0
மே 31 வரை பயணிகள் விமான போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு
மே 31 வரை பயணிகள் விமான போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு
மே 31 வரை பயணிகள் விமான போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!!

கொரோனா பரவல் காரணமாக மே 31 ஆம் தேதி வரை பன்னாட்டு விமான போக்குவரத்து தடை நீட்டிக்கப்படுவதாக இந்திய விமான போக்குவரத்து இயக்ககம் அறிவித்துள்ளது.

விமான போக்குவரத்து:

கடந்த ஆண்டு நாடு முழுவதும் பரவிய கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் பன்னாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இந்த தடை 2021 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்தியா தற்போது கொரோனா இரண்டாம் அலையை எதிர்கொண்டு வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகள் இந்தியாவுடனான பயணிகள் விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இந்திய பயணிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை – ஆஸ்திரேலியா அரசு எச்சரிக்கை!!

அதே நிலையில் இந்தியாவும் பன்னாட்டு விமான சேவையை மே 31ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய விமான இயக்ககம் அறிவித்துள்ளது. தொடர்ந்து பன்னாட்டு சரக்கு விமானங்கள் இயங்குவதற்கு சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கொரோனா பரவலுக்கு மத்தியில் பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்திய பயணிகளுக்கு உதவும் வகையில் இந்தியாவிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் சர்வதேச விமானங்கள் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

TN Job “FB  Group” Join Now

இந்தியாவில் தற்போதுள்ள கொரோனா இரண்டாம் அலை காரணமாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் பயணிகள் விமானங்களை ரத்து செய்துள்ளது. மேலும் விமானம் மூலம் இந்திய பயணிகள் ஆஸ்திரேலியாவுக்கு வருவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையுடன், அபராதமும் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!