இரவு ஊரடங்கு மீண்டும் அமல்? இனிமேல் மாஸ்க் இல்லாமல் பயணம் செய்யலாம்! அரசு அறிவிப்பு!
இந்திய நாட்டின் தலைநகரான டெல்லியில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால் நிறைய தளர்வுகளை அரசு கொடுத்துள்ளது.இதனை பயன்படுத்தி பொது மக்கள் பொறுப்புடன் செயல்படுமாறு டெல்லி ஆளுநர் கூறியுள்ளார்.
கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்:
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்த நிலையில் அந்தந்த மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் அளிக்க பட்டு உள்ளன. இந்த ஊரடங்கில் மாஸ்க் அணிவது மிக முக்கிய அவசியமாக கருதப்பட்டது. அதற்காக பல விழிப்புணர்வுகளும் அளிக்கப்பட்டது. உலக மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்தால் கொரோனா பரவலை உடைக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்து வந்தனர்.
2022ம் ஆண்டில் 11 நாட்களுக்கு அரசு பொது விடுமுறைகள் அறிவிப்பு – முழு பட்டியல் வெளியீடு!
இந்த நிலையில் இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் தற்போது கொரோனா தொற்று சற்று குறைந்து வரும் நிலையில் ஒரு சில கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் தலைமையிலான டெல்லி பேரழிவு மேலாண்மை ஆணையம் நடத்திய கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் என்னவென்றால், டெல்லியில் சொந்தமாக நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர் தங்கள் வாகனங்களில் பயணம் செய்யும் போது நாளை முதல் கட்டாயமான முறையில் முகக்கவசம் அணிய தேவை இல்லை. அது மட்டுமில்லாமல் தனியாக பயணம் செய்யும் ஓட்டுனர்களும் முகக்கவசம் அணிய வேண்டியது இல்லை என்றும், ஆனால் வாடகை காரில் பயணம் செய்வார்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது இடங்களில் முகக்கவசம் அணிவதற்கு விதிக்கப்பட்ட அபராதம் ரூ.2,000லிருந்து ரூ.500 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் இரவு நேர ஊரடங்கு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் முதல் அனைத்து பள்ளிகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்ற சனிக்கிழமை 440 பேர் மட்டுமே கொரோனாவால் டெல்லியில் பாதிக்கப்பட்டிருந்தனர். கொரோனா தற்போது 0.83 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவ்வாறு தளர்வுகளை அறிவித்துள்ளது.