தமிழகத்தில் டிச.26 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் – ஓமிக்ரான் பரவல் அச்சம்! அமைச்சர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் டிச.26 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் - ஓமிக்ரான் பரவல் அச்சம்! அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் டிச.26 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் - ஓமிக்ரான் பரவல் அச்சம்! அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் டிச.26 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் – ஓமிக்ரான் பரவல் அச்சம்! அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்புகள் குறைந்து சீராக உள்ள நிலையில் தற்போது உருமாறிய ஓமைக்ரான் வகை தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளை உத்தரவிட்டுள்ளார்.

புதிய கட்டுப்பாடுகள்:

தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்புகள் குறைந்து நிலைமை சீரடைந்து வந்துள்ளதால் தமிழக அரசு கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல தளர்வுகளையும் அளித்துள்ளது. இறுதியாக டிசம்பர் 16ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளின்படி தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகள் காரணமாக மக்கள் அதிக கூட்டம் சேர வாய்ப்புள்ளது. இதனால் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளை டிசம்பர் 31ம் தேதி வரை நீடித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வகை தொற்று பரவல் சமீபத்தில் அதிக அளவில் உறுதி செய்யப்பட்டு வருகிறது.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – அமைச்சர் சொன்ன ஹாப்பி நியூஸ்!

இதனால் தமிழகத்தில் டிசம்பர் 26ம் தேதியான நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நேரில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழகத்தில் ஓமைக்ரான் பாதிக்கப்பட்ட 34 பேர்களில் அதிக அளவில் குணடமடைந்து தற்போதைய தமிழகத்தின் பாதிப்பு எண்ணிக்கை 22 ஆக உள்ளது. ஆனால் முன்னதாக அனுப்பி வைக்கப்பட்ட 40 பேர்களின் ஆய்வு அறிக்கைகள் இன்னும் கிடைக்க வில்லை. இது தவிர 39 பேருக்கு தமிழகத்தில் ஓமைக்ரான் தொற்றின் பாதிப்புக்கு முந்தைய நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது.

1 முதல் 5ம் வகுப்புகளுக்கு டிச.27ம் தேதி பள்ளிகள் திறப்பு – அரசு அறிவிப்பு!

மேலும், ஓமைக்ரானின் அதிக அபாயம் இல்லாத நாடுகளில் இருந்து வரும் பயணிகளின் சோதனை தற்போது 10% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நாளை முதல் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் கட்டாயமாக அவர்களின் வீடுகளில் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். நட்சத்திர விடுதிகள் மற்றும் மற்ற இடங்களில் கூட்டமாக புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்த வேண்டாம் என்றும் பண்டிகை காலத்தில் அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், தெலுங்கானா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஓமைக்ரான் தொற்று அதிக அளவில் பரவி உள்ளது. விரைவில் மத்திய அரசின் சுகாதார குழுவினர் தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையிலும், அது தொடர்பான ஆய்வினை மேற்கொள்ளவும் வர இருக்கிறார்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!