தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்கள் கவனத்திற்கு – புதிய தளர்வுகள் அறிவிப்பு!

0
தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்கள் கவனத்திற்கு - புதிய தளர்வுகள் அறிவிப்பு!
தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்கள் கவனத்திற்கு - புதிய தளர்வுகள் அறிவிப்பு!
தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்கள் கவனத்திற்கு – புதிய தளர்வுகள் அறிவிப்பு!

துருக்கியில் உலக சுகாதார அமைப்பால் அனுமதி அளிக்கப்பட்ட இரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்திய மற்றும் நேபாள நாட்டு பயணிகளுக்கு அந்நாட்டு அரசு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி:

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் ஏராளமான மக்கள் தினந்தோறும் உயிரிழந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவிக்கிறது. இந்த நிலையில் அனைத்து நாடுகளும் தொற்று பரவும் அச்சத்தால் சர்வதேச பயணிகள் விமானத்திற்கு தடையை அறிவித்தது. தொடர்ந்து தொற்று அதிகரித்ததால் விமான தடை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் அதிகரித்து வரும் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் செய்ய ‘ஆதார்’ கார்டு கட்டாயம் – அரசு அறிவிப்பு!

மேலும் வெளிநாட்டு பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் அனைத்து நாட்டு அரசுகளும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர். அதன் விளைவாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு இரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் படிப்படியாக கொரோனா பரவல் குறைந்து மக்கள் இயல்பு நிலையை நோக்கி திரும்பி வருகின்றனர்.

தமிழகத்தில் நவ.20ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

மற்ற நாடுகளை தொடர்ந்து துருக்கியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக வெளிநாட்டு பயணிகள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா நெகட்டிவ் என்ற பட்சத்தில் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது தடுப்பூசி பயன்பாடு அதிகரித்ததை தொடர்ந்து துருக்கி அரசு இரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்திய மற்றும் நேபாள நாட்டு பயணிகளுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளித்துள்ளது. மேலும் இந்திய மற்றும் நேபாள பயணிகள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி மற்றும் பரிசோதனை சான்று கட்டாயமில்லை என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!