ஜனவரி 18 முதல் ஊரடங்கு உத்தரவு அமல், புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு – மாநில அரசு உத்தரவு!

0
ஜனவரி 18 முதல் ஊரடங்கு உத்தரவு அமல், புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு - மாநில அரசு உத்தரவு!
ஜனவரி 18 முதல் ஊரடங்கு உத்தரவு அமல், புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு - மாநில அரசு உத்தரவு!
ஜனவரி 18 முதல் ஊரடங்கு உத்தரவு அமல், புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு – மாநில அரசு உத்தரவு!

ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை முன்னிட்டு வரும் ஜனவரி 18 முதல் இரவு ஊரடங்கு உத்தரவு தினமும் இரவு இரவு 11 மணி மற்றும் காலை 5 மணி வரை அமல்படுத்தப்படும் என்று மாநில முதன்மை செயலாளர் அறிவித்துள்ளார்.

இரவு ஊரடங்கு:

ஆந்திரா மாநிலத்தில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 984 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், ஆந்திரப் பிரதேசத்தில் செயலில் உள்ள COVID-19 வழக்குகளின் எண்ணிக்கை 5,000-ஐத் தாண்டி 5,606 ஐத் தொட்டு விட்டது என்று மாநில சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது. வாராந்திர கோவிட்-19 நேர்மறை விகிதம் 0.36 சதவீதத்தில் இருந்து இப்போது இரண்டு சதவீதமாக உயர்ந்துள்ளது என்று மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை தெரிவிக்கின்றன. இதுவரை 20,82,843 பேருக்கு கொரோனா நேர்மறையாகியுள்ள நிலையில் மொத்தம் 3.16 கோடி சோதனைகள் மூலம் ஒட்டுமொத்த நேர்மறை விகிதம் 6.59 சதவீதமாக இருந்தது.

TNPSC காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – ஜனவரி 31 முதல் கலந்தாய்வு! முழு விவரம் இதோ!

கோவிட் -19 தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ஜனவரி 17 முதல் மெய்நிகர் மூலம் மட்டுமே ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை மெய்நிகர் மூலமே விசாரணைகள் தொடரும் என்று உயர் நீதிமன்ற அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவும் சூழ்நிலையில் மெய்நிகர் விசாரணைகளை நடத்துமாறு கீழமை நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களையும் உயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. முதல்வர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று கடந்த ஒரு வாரமாக புதிய வழக்குகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு கோவிட் ஊரடங்கு உத்தரவைக் கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்? மாநில முதல்வர்களுடன் பிரதமர் நாளை முக்கிய ஆலோசனை!

இதனால் செவ்வாய் கிழமையான நேற்று அரசு புதிய உத்தரவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 18 முதல், மாநிலத்தில் தினமும் இரவு 11 மணி மற்றும் காலை 5 மணி வரை 6 மணி நேரம் இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று முதன்மைச் செயலாளர் அனில் குமார் சிங்கால் தெரிவித்துள்ளார். மல்டிபிளக்ஸ்கள் மற்றும் திரையரங்குகள் 50 சதவீத திறனுடன் மாற்று இருக்கை ஏற்பாடுகளுடன் செயல்படும். திருமணங்கள், மத மற்றும் சமூக நிகழ்வுகள் உட்பட அனைத்து கூட்டங்கள் மற்றும் சபைகள், அதிகபட்சமாக 200 நபர்களுடன் வெளிப்புற இடங்களில் நடைபெறும் என்றும் அனைவரும் தகுந்த கோவிட் தடுப்பு நடைமுறைகளை கையாள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!