மே 4 முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் – மாநில அரசு அறிவிப்பு!
கேரளா மாநிலத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிக வேகத்தில் பரவி வருவதால் அம்மாநில அரசு மீண்டும் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள அரசு அறிவிப்பு:
நாட்டில் கொரோனா தொற்றின் முதல் அலையின் போதும் கேரள மாநிலத்தில் தான் பாதிப்புகள் அதிக அளவில் இருந்தது. ஆனால் கேரள மாநிலம் முதல் அலையில் இருந்து அதிக வேகத்தில் மீண்டு வந்தது. தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவலுக்கும் கேரளா சிக்கியுள்ளது. அதிலும், நாட்டிலேயே அதிக பாதிப்புகள் உள்ள இரண்டாவது மாநிலமாக கேரளா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மே, ஜூன் மாத மின் கட்டணம் வசூல் – TNEB க்கு கோரிக்கை!!
நேற்று ஒரு நாளில் மட்டும் 38,607 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு 48 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளத்தில் மொத்த பாதிப்பு 15,33,985 ஆக உயர்ந்துள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கையாக ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மே 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகளை முதல்வர் அறிவித்துள்ளார்.
புதிய கட்டுப்பாடுகள்:
மாநிலம் முழுவதும் சினிமா மற்றும் சீரியல்களுக்கான உள்புற மற்றும் வெளிப்புற படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி இரண்டாவது டோஸ் போட வேண்டியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பில்லை என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்ட பின்னர், முதல் டோஸ் தடுப்பூசி போட வேண்டியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். மேலும், பாதிப்புகள் அதிக அளவில் இருந்த போதிலும் அவர்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் கையிருப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.