சென்னை விமான நிலையத்தில் புதிய கட்டுப்பாடு – ஓமைக்ரான் வைரஸ் பரவல் எதிரொலி!!’

0
சென்னை விமான நிலையத்தில் புதிய கட்டுப்பாடு - ஓமைக்ரான் வைரஸ் பரவல் எதிரொலி!!'
சென்னை விமான நிலையத்தில் புதிய கட்டுப்பாடு - ஓமைக்ரான் வைரஸ் பரவல் எதிரொலி!!'
சென்னை விமான நிலையத்தில் புதிய கட்டுப்பாடு – ஓமைக்ரான் வைரஸ் பரவல் எதிரொலி!!’

தமிழகத்தில் ஓமைக்ரான் வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விமான பயணிகளின் நலன் கருதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ள காத்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை:

தமிழகத்தில் அடுத்த தாக்குதலாக ஓமைக்ரான் வைரஸ் தொற்று பரவ தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் மீண்டும் அச்சம் அதிகரித்துள்ளது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கையாக அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் பல கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் சில மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தாத மக்களுக்கு ரேஷன் பொருட்கள் மறுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் பொது இடங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஓமைக்ரான் தொற்று தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவ தொடங்கியது. கொரோனா வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு!

தென்னாபிரிக்காவில் இருந்து இந்தியா வந்த கர்நாடகாவை சேர்ந்த 2 பேருக்கு ஓமைக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களிலும் பரவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் விமான நிலையங்களில் ஓமைக்ரான் தடுப்பு நடவடிக்கையாக லண்டன், சிங்கப்பூர், இத்தாலி, ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட 44 நாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 9ம் தேதி வரை மிதமான மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

டெஸ்ட் எடுக்கும் பயணிகள் ஒரு மணி நேரம் வரையிலும் காத்திருக்கும் நிலை இருந்தது. இது பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. இதனை தவிர்க்கும் வகையில் ஆர்.டி.பி.சி.ஆர்.டெஸ்ட் எடுக்கும் பயணிகளுக்கு 5-ல் இருந்து 6 மணி நேரத்திற்குள்ளும்,ரேபிட் டெஸ்ட் எடுக்கும் பயணிகளுக்கு 30ல் இருந்து 45 நிமிடங்களுக்குள்ளும், மாற்று உள்நாட்டு விமானங்களில் செல்லக்கூடிய டிரான்சிஸ்ட் பயணிகளுக்கு 20 நிமிடங்களில் முடிவுகள் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு நாளைக்கு 700-ல் இருந்து 800 பயணிகளுக்கு சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!