தமிழகத்தில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்துக்கு “இந்த” நிறம்? புதிய அறிவிப்பு!
தமிழகத்தில் தற்போது நகர பேருந்துகளில் அனைத்து வயது மகளிருக்கும் இலவசமாக பயணம் மேற்கொள்ள தமிழக முதல்வர் மகளிர் பயண கட்டணமில்லா பேருந்து என்ற திட்டத்தை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். தற்போது எந்த பேருந்தில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிந்து கொள்ள ஏதுவாக இந்த நிறம் இலவச பேருந்துகளில் பூசப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் கட்டணமில்லா பேருந்து
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தனது வாக்குறுதியில், அனைத்து மகளிரும் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திமுக ஆட்சி அமைத்ததும் தனது வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. இதில் குறிப்பாக தமிழகத்தின் நகரப் பேருந்துகளில் அனைத்து வயது மகளிரும் இலவசமாக பேருந்துகளில் தங்களின் மாவட்டத்திற்குள் பயணம் மேற்கொள்ளலாம் என்று தமிழக முதல்வர் அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, பணிபுரியும் பெண்கள், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைவரும் நகர பேருந்தில் இலவசமாக பயணித்து வருகின்றனர்.
GATE மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி பொறியாளர் நியமனம் கூடாது? பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
மேலும் இத்திட்டம் வயதானவர்களுக்கு பேருதவியாக உள்ளது. அத்துடன் மகளிர் கட்டணமில்லா பேருந்தில் பயணிக்கும் மகளிருக்கு இலவச பயணச்சீட்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் மகளிர் கட்டணமில்லா பயணச்சீட்டு என குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும் இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானோர் பயன் அடைகின்றனர். ஆனாலும் ஒரு சில சமயத்தில் எந்த பேருந்து மகளிர் கட்டணமில்லா பேருந்து என்று குழப்பங்கள் ஏற்படுகிறது. இந்த குழப்பத்தை தீர்க்கும் வகையில் தமிழக அரசு ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது, மகளிர் கட்டணமில்லா பேருந்தை எளிதாக கண்டுபிடிக்க ஏதுவாக மகளிர் கட்டணமில்லா பேருந்தின் முகப்பு பக்கம் மற்றும் பின்புறம் என இரு புறத்திலும் இளஞ்சிவப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது. மேலும் இதனை நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை தொடங்கி வைக்கிறார். அதனால் இனி மகளிர் கட்டணமில்லா பேருந்தை சுலபமாக அடையாளம் காணலாம். அத்துடன் இனிமேல் எந்த பேருந்து மகளிர் கட்டணமில்லா பேருந்து என்ற குழப்பின்றி பயணம் மேற்கொள்ளலாம். இந்த அறிவிப்பு மகளிரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.