தமிழகத்தில் வரும் ஆண்டுகளில் புதிய கல்லூரிகள் – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!
தமிழகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் மாணவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதாவது வரும் ஆண்டுகளில் புதிய கல்லூரிகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி :
தமிழக அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிக்க வேண்டும் என்ற நோக்கில் மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் 3வது நாள் கூட்டம் இன்று தொடங்கி உள்ளது. அதில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்கிறார். அதாவது நேற்று முன்தினம் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – அகவிலைப்படி உயர்வு! நிலுவைத்தொகையும் கிடைக்கும்! சூப்பர் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இன்றைய சட்டப்பேரவை கூட்ட தொடரில் வரும் 2023-24 நடப்பு கல்வியாண்டாடுகளில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இல்லாத தொகுதிகளில் புதிய கல்லூரிகள் ஆரம்பிக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கிராமப்புற மாணவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏனெனில் இன்றளவும் பல கிராமப்புற மாணவர்கள் தங்களின் உயர்கல்வியை தொடர முடியாமல் இருக்கின்றனர். இந்த அறிவிப்பு அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.