பஞ்சாபின் புதிய முதல்வர் இன்று பதவியேற்றார் – பிரதமர் வாழ்த்து!
பஞ்சாப் மாநிலத்தின் 16 வது முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி இன்று காலை 11 மணியளவில் பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சித்து உட்பட பலர் கலந்து கொண் டனர்.
பஞ்சாப் முதல்வர்:
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமரீந்தர் சிங்கும் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்ட வண்ணம் இருந்து வந்தது. அவ்வபோது கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பேச்சு வார்த்தை நடத்தி முடித்து வைப்பார். ஆனாலும் இருவருக்குமான பிரச்சனை ஓயவில்லை தொடர்ந்த வண்ணம் இருந்தது. இதனால் முதலமைச்சர் அமரீந்தர் சிங் ம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
தமிழகத்தில் டாஸ்மாக் பார்கள் விரைவில் திறப்பு? தயாராகும் புதிய கட்டுப்பாட்டு விதிகள்!
அதனை தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் தலைவர் சித்து அறிவித்தார். இதனால் முதல்வர் அமரீந்தர் சிங் பஞ்சாபின் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அடுத்த கட்ட நடவடிக்கையாக சண்டிகரில் காங்கிரசின்
எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்பட்டு அடுத்த முதலமைச்சராக சரண் ஜித் சன்னி நேற்று தேர்வு செய்யப்பட்டார்.
தமிழகத்தில் டாஸ்மாக் பார்கள் விரைவில் திறப்பு? தயாராகும் புதிய கட்டுப்பாட்டு விதிகள்!
பஞ்சாப் மாநிலத்தின் 16 வது முதல்வராவார். புதிய முதல்வரான சரண்ஜித் சிங் சன்னி இன்று காலை 11 மணிக்கு பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்துவைத்தார். அவரை தொடர்ந்து சுக்ஜிந்தர் சிங் ரந்தவா மற்றும் ஓம் பிரகாஷ் சோனி ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றனர். பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிற முக்கிய தலைவர்கள் காத்து கொண்டனர். புதிய முதல்வருக்கு இந்திய பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.