தமிழகத்தில் கொரோனா தடுப்பு புதிய கட்டுப்பாடுகள் – முக ஸ்டாலின் வலியுறுத்தல்!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மே 6ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. மக்கள் அனைவரும் இதை கட்டாயமாகவும், கவனமாகவும் கடைபிடிக்க வேண்டும் என முக ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
புதிய கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் வேகமெடுத்து பரவி வருகிறது. மாநில அரசுகள் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செய்து வருகின்றன. அரசு மக்களுக்கு நோயின் தீவிரத்தை உணர்த்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. மண்டலங்கள் தோறும் காய்ச்சல் முகாம்கள் நடத்தி மக்களை வைரஸ் தொற்றை கண்டறிந்து வருகின்றன. சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி பயன்படுத்துதல் போன்ற விதிமுறைகளை கடைபிடிக்க மக்களுக்கு அரசு வலியுறுத்தி வருகிறது.
தற்போது தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் சனி, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் தொற்று பரவல் குறையாததால் அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. வருகின்ற மே 6ம் தேதி புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளன. இது குறித்து புதிய முதல்வராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலின் கூறுகையில் கொரோனா 2வது அலை, முதல் அலையை விட மிக மோசமானதாக இருக்கிறது. வட மாநிலங்களில் இருந்து வரும் தகவல்கள் அச்சம் தருவதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
TANGEDCO ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு – அரசாணை வெளியீடு!!
எனவே இந்த நிலையில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய கட்டுபாடுகள் மக்களின் நலனுக்காகவே! கொரோனா நோய் பரவல் தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றி செயல்படுவோம் எனவும் மக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே அது சாத்தியம் மக்கள் அனைவரும் கவனமாக கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்