அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அடுத்த மாதம் முதல் புதிய மாற்றம் அமல்!
இந்தியாவில் ரேஷன் கார்டு மூலமாக மலிவான விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து சில மாநிலங்களில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் நடைமுறையில் உள்ளது. அடுத்த மாதத்தில் இருந்து இந்த திட்டத்தில் சில மாற்றங்கள் அமலாக உள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு
இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் உணவு பொருட்கள் கிடைக்க வேண்டுமென்று குறைவான விலையில் ரேஷன் பொருட்கள் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து பேரிடர் காலங்களில் அரசி மற்றும் கோதுமை உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இது போன்ற பல திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச கோதுமை மற்றும் அரிசி உள்ளிட்டவை வழங்கப்படும் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
ரயில் பயணிகள் கவனத்திற்கு – வெயிட்டிங் டிக்கெட் பணத்தை திரும்ப பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!
இத்திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கோதுமை ஒதுக்கீட்டின் அளவை மத்திய அரசு குறைத்துள்ளது. அத்துடன் மே முதல் செப்டம்பர் வரை உத்தரபிரதேசம், பீகார் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கோதுமை வழங்கப்படுவது ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வருகிற ஜூன் மாதத்திலிருந்து சில மாநிலங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கோதுமை குறைவாகவும் அரிசி அதிகமாகவும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதில் குறிப்பாக குஜராத், டெல்லி, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கோதுமை குறைவாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இவர்களுக்கு கூடுதலாக 55 லட்சம் மெட்ரிக் டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்படும் என்று உணவுத்துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே தெரிவித்துள்ளார். இது தவிர மற்ற மாநிலங்களில் வழக்கமாக வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த புதிய மாற்றத்திற்கு முக்கிய காரணம் நாட்டில் கோதுமை கொள்முதல் குறைந்துள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.