நாடு முழுவதும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – அரசு அறிவித்த முக்கிய மாற்றங்கள்!
மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் ரேஷன் அட்டைகள் மூலமாக பொருள்கள் வாங்கும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன் படி சில முக்கிய விதிமுறைகளை மாற்றம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டைகள்:
ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு ரேஷன் அட்டைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. மாதந்தோறும் மலிவு விலையில் ரேஷன் கடைகளில் பல உணவு பொருள்கள் வழங்கப்படுகிறது. மத்திய அரசு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பல நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அதில் ஒன்று தான் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் பயனர்களாக இருப்பவர்களுக்கு ரேஷன் விதிகளில் புதிய மாற்றத்தை அரசு அறிவித்துள்ளது. அந்த மாற்றம் ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றம் 1: கோதுமைக்கு பதிலாக அரிசி
நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களிலும் மத்திய அரசால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச கோதுமை மற்றும் அரிசி வழங்கப்படுகிறது. இந்த பொருள்கள் பிரதமர் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் வழங்ப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் இப்போது கோதுமைக்கு பதிலாக அரிசி வழங்கப்படும், அதனால் ஜூன் மாதம் முதல் குறைந்த கோதுமையும், அதிக அரிசியும் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றம் 2: மூன்று மாநிலங்களில் கோதுமை கிடையாது
மத்திய அரசு கரிப் கல்யாண் அன்னா யோஜனா திட்டத்தின் கீழ் மே முதல் செப்டம்பர் வரை கொடுக்கப்படும் கோதுமையின் அளவை குறைத்துள்ளது. இந்த மாற்றத்திற்குப் பிறகு, உத்திரப்பிரதேசம் , பீகார் மற்றும் கேரளாவில் இலவச விநியோகத்திற்கு கோதுமை கிடைக்காது. அதே சமயம் டெல்லி, குஜராத், ஜார்க்கண்ட், ம.பி., மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கோதுமைக்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு குறைந்த அளவில் கோதுமையும், அதிக அளவில் அரிசியும் வழங்கப்படும்.
Exams Daily Mobile App Download
இது தவிர மற்ற மாநிலங்களில் எந்த மாற்றமும் இல்லை. கோதுமை கொள்முதல் குறைவாக இருப்பதால் தான் உத்தரபிரதேசம், பீகாரில் கோதுமை அளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோதுமைக்கு பதிலாக சுமார் 55 லட்சம் மெட்ரிக் டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்படும் என உணவுத்துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே தெரிவித்துள்ளார். இந்த மாற்றம் பிரதமர் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள ரேஷன் அட்டைகளுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.