Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவரா நீங்கள்? புதிய மாற்றங்கள் அமல்! தவறாமல் படிங்க!
போஸ்ட் ஆபீஸ் தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் டிஜிட்டல் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது கணக்கை மூட வேண்டும் என்றால் அதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதிய மாற்றங்கள்:
மத்திய அரசின் போஸ்ட் ஆபிஸில் இருக்கும் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களில் தற்போது பல மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் வங்கியை காட்டிலும் போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் இரட்டிப்பு பலன் இருப்பதை அறிந்து கொண்ட பலரும் இப்போது அதிகமாக போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். மிடில் கிளாஸ் தொடங்கி அப்பர் கிளாஸ் வரை போஸ்ட் ஆபீஸ் முதலீட்டில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாட விரும்பும் அஸ்வின் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
மத்திய அரசு அறிமுகப்படுத்திய 9 வகையான் சிறு சேமிப்பு திட்டங்களும் நல்ல வரவேற்பை பெற்று உள்ளன. இந்த அடிப்படையில் போஸ்ட் ஆபீஸ் சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்கள் டிஜிட்டல் முறையில் பிரீமியம் தொகையை கட்டலாம். இந்த டிஜிட்டல் கணக்கு போஸ்ட் ஆபீஸில் தொடங்க 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த டிஜிட்டல் கணக்கிற்கு மினிமம் பேலன்ஸ் பிரச்சனையும் இல்லை. தற்போது இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்கை மூட வேண்டுமெனில் அதற்கு தனியாக 150 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் சேர்த்து செலுத்த வேண்டும்.
1.இந்தக் கட்டண முறை மார்ச் 5ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
2.அதாவது, KYC இல்லாமல், ஒரு ஆண்டுக்கு மேற்பட்ட சேமிப்புக் கணக்குகளுக்கு மட்டுமே இந்த கட்டணம் வசூலிக்கப்படும்.
3.டிஜிட்டல் சேமிப்புக் கணக்குகள் திறக்கப்பட்டு 12 மாதத்திற்குள் KYC சரிபார்ப்பு முடிக்க வேண்டும்.
4.இந்தக் கட்டணம் டிஜிட்டல் சேமிப்புக் கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும்.