LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோரின் கவனத்திற்கு – உஜ்வாலா திட்டத்தில் புதிய மாற்றம்!
மத்திய நிதியமைச்சர் உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.200 வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது சிலிண்டர் வாங்குவதில் சில மாற்றங்கள் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பற்றி விரிவாக பார்ப்போம்.
சிலிண்டர்:
இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு உஜ்வாலா யோஜனா திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் உள்ளவர்களுக்கு இலவசமாக சிலிண்டர் இணைப்பு வழங்கப்படுவதுடன் அரசு சார்பாக மானியத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் சிலிண்டருக்கான மானியத் தொகை தற்போது வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் இன்று அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
கொரோனா கால கட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை தொடர்ந்து சிலிண்டரின் விலையும் மாதந்தோறும் புதிய புதிய உச்சத்தை தொட்டது. அதனால் இத்திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு மானியத் தொகை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அண்மையில் மத்திய நிதியமைச்சர் சீதாராமன் பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.200 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அத்துடன் இத்திட்டத்தில் கீழ் 1 கோடி புதிய இணைப்புகளை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
அதனால் மானியம் வழங்குவதில் சில மாற்றங்கள் வர உள்ளது. அத்துடன் பெட்ரோலிய அமைச்சகம் இரண்டு புதிய கட்டமைப்புகளுக்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. அதன்படி புதிய மாற்றத்திற்கு பிறகு நீங்கள் EMI வடிவில் பணம் செலுத்தாமல் மொத்தமாக செலுத்த வேண்டியிருக்கும். இத்திட்டத்தில் கீழ் உள்ளவர்களுக்கு 3200 ரூபாய் மதிப்புடைய 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர் வழங்கப்படுகிறது. இதில் 1600 ரூபாய் அரசு சார்பாக மானியமாக வழங்கப்படுகிறது. மேலும் திட்டத்தின் கீழ் இணைவதற்கு pmujjwalayojana.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஆனால் இதற்கு நீங்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் என்பது அவசியமாகும்.