அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய மாற்றங்கள் குறித்த விபரங்கள்!
இந்தியாவில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிக அளவு அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கோதுமைக்கான ஒதுக்கீடு அளவு குறைந்துள்ளது.
ரேஷன் கார்டு:
இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் மானிய விலையில் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, கோதுமை, தானியங்கள், பருப்பு , எண்ணெய், உள்ளிட்ட பொருட்களை பெற்று பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியா முழுவதும் வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு அவர்களும் பயன்பெறும் வகையில் இந்தியாவில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டமும் கொண்டு வரப்பட்டது. தற்போது அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
தமிழகத்தில் அசைவ பிரியர்களுக்கு ஷாக் நியூஸ் – அதிரடியாக உயரும் கறிக்கோழி, முட்டை விலை!
இதன் மூலம் வெளி மாநிலங்களில் தங்கி பணிபுரிபவர்கள் தங்கள் வசிக்கும் மாநிலங்களில் ரேஷன் பொருட்களை பெற்று பயனடையலாம். கடந்த 2020 , 2021 ம் ஆண்டு நிலவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் ரேஷன் அட்டைதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாநிலங்களிலும் இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் கோதுமைக்கான ஒதுக்கீட்டை அரசு குறைந்துள்ளது. அரிசிக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏற்கனவே இந்த முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது. கோதுமை மிக குறைவான அளவே கொள்முதல் செய்யப்பட்டது. மே 1 ஆம் தேதி நிலவரப்படி, அரசாங்க நிறுவனங்களின் கோதுமை கொள்முதல் ஆண்டுக்கு 42% குறைந்துள்ளது. அதனால் தற்போது இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.