பிப்ரவரி 28 முதல் பள்ளிகள் திறப்பில் புதிய மாற்றங்கள் – ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து!

0
பிப்ரவரி 28 முதல் பள்ளிகள் திறப்பில் புதிய மாற்றங்கள் - ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து!
பிப்ரவரி 28 முதல் பள்ளிகள் திறப்பில் புதிய மாற்றங்கள் - ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து!
பிப்ரவரி 28 முதல் பள்ளிகள் திறப்பில் புதிய மாற்றங்கள் – ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து!

கேரளாவில் கொரோனா நோய்த்தொற்று நிலைமை தற்போது மேம்பட்டு வருவதால், ஞாயிற்றுக்கிழமை விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

முழு ஊரடங்கு

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புகள் தீவிரமடைந்து வந்ததையடுத்து கடந்த மாதத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஜனவரி 23. மற்றும் பிப்ரவரி 6 போன்ற ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த வார இறுதி முழு முடக்கம் மூலம் கேரளாவில் தற்போது தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைய துவங்கி இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு ஊரடங்கில் இருந்து தளர்வுகளை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.

Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவரா நீங்கள்? புதிய மாற்றங்கள் அமல்! தவறாமல் படிங்க!

அந்த வகையில் நேற்று (பிப்.8) முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற கொரோனா மறுஆய்வுக் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்க முடிவு எடுக்கப்பட்டது. அதன் படி, பிப்ரவரி 28ம் தேதி முதற்கொண்டு பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் இயல்பான செயல்பாடு மீண்டும் தொடங்கும் என்று அரசு அறிவித்துள்ளது. தற்போது, மாநிலம் முழுவதும் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆப்லைன் வகுப்புகளும் 1 முதல் 9 வரையுள்ள வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாட விரும்பும் அஸ்வின் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

இப்போது பள்ளிகளை மீண்டும் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கல்வித்துறைக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து நிறுவனங்கள் அனைத்தும் ஊழியர்களின் முழு வருகையுடன் செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆலுவா சிவராத்திரி, மாரமன் மாநாடு மற்றும் ஆட்டுக்கல் பொங்கல் உள்ளிட்ட மத விழாக்களில் அதிக நபர்களை அனுமதிக்க அரசு திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து மாநிலத்தில் நிலவும் கொரோனா நிலைமைக்கு ஏற்றபடி அடுத்த கட்ட தளர்வுகள் வழங்கப்படும் என்று அரசாங்க செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!