மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான விதிகளில் மாற்றம் – முக்கிய அறிவிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான விதிகளில் மாற்றம் - முக்கிய அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான விதிகளில் மாற்றம் - முக்கிய அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான விதிகளில் மாற்றம் – முக்கிய அறிவிப்பு!

கடந்த சில நாட்களாக அரசு ஊழியர்களுக்கு பல அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பான விதிகளை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

விதிகளில் மாற்றம்:

7வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இந்த அறிவிப்பால் சுமார் 45 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெற உள்ளனர். இந்நிலையில் மத்திய அரசு குடும்பப் பென்சன் விதிமுறைகளை திருத்தி அறிவித்துள்ளது. அதன்படி தீவிரவாதம், மாவோயிஸ்ட் ஊடுருவலால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு குடும்ப பென்சன் விதிகள் மாற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

இப்பகுதிகளில் காணாமல் போன மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய பென்சன் விதிகள் அமலுக்கு வருகிறது. பழைய விதிமுறைப்படி, மத்திய அரசு ஊழியர் பணிக்காலத்தில் தொலைந்து விட்டால் அவரது குடும்பத்துக்கு பென்சன் வழங்கப்படாது. மாறாக, அவர் தொலைந்து ஏழு ஆண்டுகள் கழித்து அல்லது அவர் இறந்துவிட்டார் என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு குடும்பத்துக்கு பென்சன் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் புதிய விதிமுறைப்படி, தீவிரவாதம், மாவோயிஸ்ட் ஊடுருவலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய அரசு ஊழியர்கள் பணி காலத்தின் போது காணாமல் போனால் அவர்களின் குடும்பத்துக்கு பென்சன் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Exams Daily Mobile App Download

இதையடுத்து மத்திய அரசு ஊழியர் பணி காலத்தின் போது தொலைந்து விட்டால் சம்பள நிலுவைத் தொகை, பணிக்கொடை, ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட பலன்கள் அவரது குடும்பத்துக்கு செலுத்தப்பட வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் காணாமல் போன மத்திய அரசு ஊழியர் மீண்டும் வந்துவிட்டால் அவர் இறந்ததாக கருதப்பட்ட காலத்தில், குடும்பத்துக்கு செலுத்தப்பட்டு வந்த பென்சன் தொகை அவரது சம்பளத்தில் இருந்து பிடித்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!