மே 1 முதல் சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

0
மே 1 முதல் சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!!
மே 1 முதல் சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!!
மே 1 முதல் சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

வரும் மே 1ம் தேதி முதல் சென்னை புறநகர் மின்சார ரயில்களின் சேவை நேரம் மாற்றியமைக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயில் சேவை மாற்றம்:

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணத்தால் அரசு தினமும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரையும், ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் அவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நேரத்தில் பேருந்துகள், ஆட்டோ மற்றும் டாக்ஸி போன்ற பொது போக்குவரத்துகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மே 1ம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்தப்படாது – மாநில அரசு அறிவிப்பு!!

இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் சேவையின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. மேலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை எந்த ரயில் சேவையும் இருக்காது என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொது முடக்க நாளான ஞாயிறு அன்று சென்னை புறநகரில் 2 மணி நேரத்திற்கு ஒரு ரயில் என்ற வீதத்தில் மொத்தம் 86 மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

தற்போது கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் கட்டுக்கடங்காமல் உள்ளதால் கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வரும் மே 1ம் தேதி முதல் சென்ட்ரல் – அரக்கோணம், சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, வேளச்சேரி, ஆகிய பகுதிகளுக்கு ஞாயிறு கால அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!