SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இன்று முதல் அமலுக்கு வந்த மாற்றங்கள்!
இந்தியாவில் ஜூன் மாதத்தில் நிதி தொடர்பான சில நடைமுறைகளில் மாற்றம் வர உள்ளது. வங்கி கடன் முதல் தங்கம் வரை பல விஷயங்கள் மாறப் போகிறது. அவை என்னென்ன என்பது குறித்து இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
மாற்றங்கள்:
மே மாதம் முடிந்து ஜூன் மாதம் தொடங்கி உள்ள நிலையில் நிதி சார்ந்த நடைமுறைகளில் பல மாற்றங்கள் வந்துள்ளது. அதாவது பண பரிவர்த்தனை, கடன் திட்டங்கள் அதன் வட்டி விகிதங்கள் மாற்றமடைந்துள்ளது. தற்போது மத்திய ரிசர்வ் வங்கி தன்னுடைய ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதனால் மிக பெரிய வங்கியான எஸ்பிஐ தன்னுடைய கடன் வட்டி விகிதத்தில் 40 புள்ளிகளை உயர்த்தியுள்ளது. அதன்படி தற்போது எஸ்பிஐ வங்கியின் கடன் வட்டி விகிதம் 6.65 ஆக உயர்த்தியுள்ளது மேலும், சிஆர்பி கட்டணம் சேர்க்கப்படுவதால் அடிப்படை வீட்டுக் கடன் வட்டி விகிதம் 7.05 %உயர்ந்துள்ளது.
ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – கேஸ் சிலிண்டருடன் இணைப்பது கட்டாயம்!
அதனை தொடர்ந்து ஆக்சிஸ் வங்கி தனது சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது. அதாவது குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க முடியாவிட்டால், கூடுதல் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த மாதம் முதல் கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது. மேலும் சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பின் படி வாகன விலை உயர்ந்துள்ளது. கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான காப்பீட்டு பிரீமியத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019-20ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது மீண்டும் இந்த கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உயர்த்தப்பட்டுள்ள வட்டி விகிதத்தால் வங்கி வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் கட்டப்படும் EMI தொகை அதிகரிக்கும்.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து ஜூன் 1-ம் தேதி முதல் தங்கம் ஹால்மார்க் விதி அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து நகைக்கடைக்காரர் ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளை மட்டுமே விற்க வேண்டும். அனைத்து நகை கடைகளில் விற்கப்படும் தங்கத்துடைய கேரட் எவ்வளவாக இருந்தாலும் அவை அனைத்தும் ஹால்மார்க் தரத்தை பெற்று இருக்க வேண்டும் என்றும், 28 மாவட்டங்களிலும் 14, 18, 20, 22, 23 மற்றும் 24 காரட் தரம் கொண்ட தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.