YouTube கட்டணம் முதல் உள்ளூர் விமான டிக்கெட் விலை வரை – இன்று முதல் 8 மாற்றங்கள்!
நாட்டில் இன்று (ஜூன் 1) முதல் யூ டியூப் கட்டணம், கூகிள் போட்டோஸ், உள்ளூர் விமான டிக்கெட் விலை என முக்கிய 8 விஷயங்களில் மாற்றம் செய்யயப்பட்டுள்ளது. தற்போது அதற்கான முழு விவரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
8 மாற்றங்கள்:
ஜூன் மாதத்தின் முதல் நாளான இன்று முதல் நாட்டில் பல துறைகளில் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளது. காஸ் சிலிண்டர், விமான கட்டணம், கூகிள் போட்டோஸ் உள்ளிட்டவற்றிற்கு கட்டணம் அதிகரிப்பு போன்ற பல மாற்றம் ஏற்படவுள்ளது. அதன்படி மாதத்தின் முதல் நாளான இன்று சமையல் காஸ் சிலிண்டரின் விலை நிர்ணயம் செய்யப்படவுள்ளது. மாதந்தோறும் முதல் நாள் விலை நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
ஸ்மார்ட் போன் பயனாளர்கள் தங்களது போட்டோஸ் மற்றும் வீடியோக்களை கூகிள் போட்டோஸில் பதிவேற்றம் செய்து பாதுகாப்பாக வைத்திருப்பர். தற்போது இதற்கும் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (ஜூன் 1) முதல் 15 ஜிபி வரையில் மக்கள் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அதற்கு மேலாக செய்தால் 100 ஜிபிக்கு மாதம் 1.99 டாலர் கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 30 வரை 144 தடை உத்தரவு அமல் – புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு!!
மேலும் சிறு சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதம் இன்று முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பிபிஎஃப், கிசான் விகாஸ் பத்ரா உள்ளிட்ட திட்டங்களுக்கும் வட்டி மாற்றப்படும். மேலும் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டமும் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சிவில் விமான போக்குவரத்து கடந்த 28ம் தேதி வெளியிட்ட அறிக்கையின்படி உள்நாட்டு விமான சேவைகளுக்கான வரம்பினை 15% அதிகரித்துள்ளது. மேலும் கட்டணம் அதிகரிப்பும் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
அதேபோல் அனைத்து யுடியூபர்ஸ்களுக்கும் அமெரிக்க பயனாளர்களிடம் வியூஸ் பெறுவதற்கு இன்று முதல் அவர்களது அடிப்படை வருவாயில் இருந்து 15% வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பேங்க் ஆப் பரோடா காசோலை பரிவர்த்தனை வழிமுறைகளை மேலும் பாதுகாக்கும் வகையில் 2 லட்சத்திற்கு மேலாக காசோலை மூலம் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்கள் தங்களது முழு விவரங்களை அறிவிக்க வேண்டும் என்று அறிவித்தது. இல்லையெனில் பரிவர்த்தனை நடைபெறாது என்று அறிவித்தது. இந்த திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் வாடிக்கையாளர்கள் தங்களது வருமான வரியினை தாக்கல் செய்வதற்கு புதிய வலைத்தளம் வருகின்ற ஜூன் மாதம் 7ம் தேதி முதல் தொடங்கப்படும் என்றும் அதற்காக அதிகாரபூர்வ இ-வரி தாக்கல் வெப்சைட் தளம் இன்று (ஜூன் 1) முதல் 6ம் தேதி வரை இயங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதிய EPFO விதிமுறைப்படி பயனாளிகள் அனைவரும் தங்களது கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் இல்லையெனில் இன்று முதல் அவர்களுக்கு வழங்கப்படும் தொகை நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.