இந்தியாவில் 2022 ஜன.1 முதல் வர போகும் புதிய மாற்றங்கள் – ஏடிஎம் முதல் ஜிஎஸ்டி வரை!
2022 ம் ஆண்டு வரவுள்ள நிலையில் இந்தியாவில் ஜனவரி 1ஆம் தேதி முதல் ஏடிஎம் முதல் சிலிண்டர் வரை அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள் குறித்து இந்த பதிவில் காண்போம்.
புதிய விதிமுறை:
நாம் 2021 ம் ஆண்டில் இறுதியில் உள்ளோம். 2022ம் ஆண்டு பிறக்க இன்னும் முழுமையாக ஒரு நாள் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் பல்வேறு துறைகள் புதிய மாற்றங்களை அறிவித்து வருகின்றது. அந்த வகையில் ஏடிஎம் பண பரிவர்த்தனைகளில் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணம் 20 ரூபாயிலிருந்து 21 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாதத்தில் 5 முறைக்கு மேல் ஏடிஎம் கார்டு மூலம் பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டால் கட்டணம் வசூலிக்கப்படும். மெட்ரோ நகரங்களில் 3 முறைக்கு மேல் பரிவர்த்தனைகளை மேற்கொண்டாலே கட்டணம் விதிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் டிச.31ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரங்கள் இதோ!
இந்த புதிய விதிமுறை 2022 ஜனவரி 1 முதல் அமலுக்கு வர உள்ளது. அதனை தொடர்ந்து மாதந்தோறும் மாற்றம் அடைந்து வரும் சிலிண்டர் விலையிலும் ஜனவரி மாதம் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சிலிண்டர் விலை அதிர்ச்சி அளிக்கும் அவகியில் மாதந்தோறும் உயர்ந்து வரும் தற்போது வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1000 ரூபாயை கடந்துள்ளது. இந்த நிலையில் 2022 வர உள்ள நிலையில் சிலிண்டர் விலை எவ்வளவு இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர் அடுத்ததாக 10000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கவும், பணம் போடவும் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய விதிமுறையை இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி கொண்டு வந்துள்ளது.
தமிழக கூட்டுறவு சங்கங்ககளில் நகைக்கடன் பெற்ற 13,47,33 பேருக்கு தள்ளுபடி – அரசு உத்தரவு!
தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கான சேவை கட்டணத்தை ஜனவரி 1 முதல் உயர்த்தவுள்ளது. மேலும் வணிக துறையில் ஜவுளி பொருட்களுக்கான ஜிஎஸ்டி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர உள்ளது. இந்த வரி ஏற்றம் 2022 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. ஜிஎஸ்டி வரி உயர்ந்தால் இனி ஆடைகள் மற்றும் காலனி உள்ளிட்ட பேஷன் உள்ளிட்ட பொருட்களின் வரியும் உயரும் என கூறப்படுகிறது. இதனால் ஜவுளி வியாபாரிகள் மற்றும் பொது மக்களும் கவலை அடைந்துள்ளனர்.