பிப்ரவரி 21 முதல் பள்ளிகள் திறப்பில் புதிய மாற்றங்கள், சீருடை கட்டாயமில்லை – மாநில அரசு முடிவு!

0
பிப்ரவரி 21 முதல் பள்ளிகள் திறப்பில் புதிய மாற்றங்கள், சீருடை கட்டாயமில்லை - மாநில அரசு முடிவு!
பிப்ரவரி 21 முதல் பள்ளிகள் திறப்பில் புதிய மாற்றங்கள், சீருடை கட்டாயமில்லை - மாநில அரசு முடிவு!
பிப்ரவரி 21 முதல் பள்ளிகள் திறப்பில் புதிய மாற்றங்கள், சீருடை கட்டாயமில்லை – மாநில அரசு முடிவு!

கோவா மாநிலத்தில் வரும் பிப்ரவரி 21ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாகவும், மாணவர்கள் கட்டாயம் சீருடை அணிய வேண்டிய அவசியம் இல்லை என்றும் கல்வி இயக்குனர் பூஷன் சவைகர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

கொரோனா வைரஸின் 3ம் அலை பாதிப்புகள் நாடு முழுவதும் அதிக அளவில் பரவி வந்த காரணத்தால் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக அனைத்து கல்வி நிலையங்களையும் மீண்டும் மூட வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி கல்வி நிலையங்களை மூட உத்தரவிட்டது. தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து இயல்பு நிலை மீண்டும் திரும்புவதால் படிப்படியாக கல்வி நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டு வருகிறது.

TNPSC கூட்டுறவுத் துறை ரூ.1.7 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு – இன்னும் 3 நாட்கள் மட்டுமே!

கோவா மாநிலத்திலும் முன்னதாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்ததை அடுத்து பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்து அரசு ஆலோசனைகளை நடத்தியது. அதன்படி, பிப்ரவரி 21 முதல் கோவாவில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் மீண்டும் திறக்கப்படும் என்றும், நேரடி வகுப்புகளுக்கு சீருடைகள் கட்டாயமாக இருக்காது மற்றும் ஆரம்ப நாட்களில் மாணவர்களுக்கு நேர சலுகை வழங்கப்படலாம் என்று மாநில அரசு வெள்ளிக்கிழமை வெளியிட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தமிழ் தெரிந்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

இது குறித்து சுற்றறிக்கையில், கல்வி இயக்குனர் பூஷன் சவைகர், தேவைப்பட்டால், ஆரம்ப நாட்களில் மாணவர்களுக்கு நேர சலுகை வழங்கலாம். தேர்வுகளை ஆஃப்லைன் முறையில் மட்டுமே நடத்த வேண்டும் என்றும், பள்ளி சீருடைகளை அதிகாரிகள் வற்புறுத்தக் கூடாது என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிப்ரவரி 21ம் தேதி முதல் மழலையர் பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளையும் திறக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநிலத்தில் COVID-19 பாதிப்புகள் குறைந்துள்ளதை கருத்தில் கொண்டு பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சவைகர் கூறினார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!