சென்னை டூ பெங்களூரு ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு – முக்கிய மாற்றங்கள்!
கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களாக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து நோய் தாக்கம் குறைந்து வருவதால் அமலில் இருந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் திரும்ப பெறப்பட்டு உள்ளது. தற்போது கோடை விடுமுறை தொடங்கி விட்டதால், ரயிலில் பயணம் செய்யும் பொதுமக்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை கோட்டத்தில் பல்வேறு மாா்க்கங்களில் பொறியியல் பணி நடைபெறவதால் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முக்கிய அறிவிப்பு:
சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பராமரிப்பு பணிகள் நடைபெறும் வழித்தடங்களில் இயங்கும் பல்வேறு ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில் நிலையம் அருகே உள்ள பணிமனையில் இன்றும் (மே17), நாளையும் (மே 18) காலை 9.45 முதல் பகல் 1.45 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக சென்னை – பெங்களூர், சென்னை – திருப்பதி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மே 18, 19 ஆம் தேதிகளில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
இதனால் இந்த 2 நாட்களும் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து சென்னை மற்றும் அரக்கோணம் காட்பாடி என இரண்டு மார்க்கத்திலும் பெங்களூரில் இருந்து சென்னை செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் (12608/12609), கோயம்புத்துாரில் இருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (12680/12679), மைசூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்(12610), சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் (12607) ஆகிய ரயில்கள் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் அரக்கோணம், சென்னை சென்ட்ரல் செல்லாது என்பது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download
இதேபோல திருப்பதியில் இருந்து சென்னை செல்லும் 16054/16053 எக்ஸ்பிரஸ் இன்றும், நாளையும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் ஜார்க்கண்ட் மாநிலம் தானாபூரில் இருந்து பெங்களூர் செல்லும் ரயில் ரேணிகுண்டா, திருத்தணி, வழியாக ரயில் செல்லும் என்றும், பெரம்பூர் செல்லாது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் சில மின்சார ரயில்களும் கடம்பத்தூரில் இருந்து இயக்கப்படும். இதுதவிர, சில ரயில்கள் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது, இந்த தகவலை தெற்கு ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.