அரிசி & தானியங்கள் மீதான ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் புதிய மாற்றம் – மத்திய அரசு அறிவிப்பு!

0
அரிசி & தானியங்கள் மீதான ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் புதிய மாற்றம் - மத்திய அரசு அறிவிப்பு!
அரிசி & தானியங்கள் மீதான ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் புதிய மாற்றம் - மத்திய அரசு அறிவிப்பு!
அரிசி & தானியங்கள் மீதான ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் புதிய மாற்றம் – மத்திய அரசு அறிவிப்பு!

இந்தியாவில் அரிசி,கோதுமை,உள்ளிட்ட தானியங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியின் சதவீதத்தை மத்திய அரசு அதிகரித்திருந்த நிலையில், தற்போது இது குறித்து முக்கிய தகவல் ஒன்றினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

ஒன்றிய அரசு:

இந்தியாவில், கடந்த சில ஆண்டுகளாக கொரோனா நெருக்கடி, வேலையின்மை, வருவாய் இழப்பு, உணவு பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஜி.எஸ்.டி வரியால் மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையினை சமாளிப்பதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சில தரப்பு மக்கள் இந்த வரிவிதிப்பினை எதிர்த்தும் வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசானது அரிசி,கோதுமை உள்ளிட்ட தானியங்களின் மீதான ஜி.எஸ்.டி வரியின் சதவீதத்தை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது. மேலும் இந்த அறிவிப்பு நேற்று முதல் நடைமுறைபடுத்தபட்டுள்ளது.

தமிழக மின் ஆளுமை சங்கத்தில் ரூ.26,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

தற்போது இந்த ஜி.எஸ்.டி வரி உயர்வில் புதிய அறிவிப்பு ஒன்றை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற 47 வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் வரிவிதிப்பிற்குள் வராத பொருட்களுக்கு 5% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் லேபிள் ஒட்டப்பட்ட பொருட்களான தயிர்,பன்னீர்,அரிசி,கோதுமை,
லெஸ்ஸி போன்ற பொருட்களுக்கும் 5%ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய வரிவிதிப்பானது நேற்று முதல் அமலுக்கு வந்த நிலையில்,நாடு முழுவதும் பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வருகின்றன.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் ஒன்றிய மறைமுக நேரடி வாரியம் இது குறித்த விளக்கம் அளித்துள்ளது. அதாவது ப்ரீ பேக்கிங் மற்றும் லேபிள் ஒட்டப்பட்ட அனைத்து பொருட்களுக்கும் 5% ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.அதே போல் 25 கிலோ மற்றும் 25 லிட்டர் க்குள் பொருட்களுக்கு மட்டும் 5% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படும் என்றும் அதே சமயம் 25 கிலோவுக்கு மேல் பொருட்கள் வாங்கினால் ஜி.எஸ்.டி வரி கிடையாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் நுகர்வோர்கள் 10 கிலோ என 3 பேக்கிங் வாங்கினால் அதற்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படும் என்றும்,ஒரே மூட்டை 25 கிலோவுக்கு மேல் இருந்தால் மட்டும் வரி விதிப்பு கிடையாது என்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!