TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு தேதியில் புதிய மாற்றம்! தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வுகள் வரும் ஜூன் மாதம் 26 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்து இருந்தது. தற்போது தேர்வுக்கான தேதிகள் மாற்றப்பட்டு ஜூலை 2ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
TNPSC:
தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் கடந்த இரு ஆண்டுகளாக அதிகரித்து வந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்து இருந்தது. மேலும் பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்றும் அதற்கான தேதியும் தெரிவித்து உள்ளது தமிழக அரசு. இது மட்டுமல்லாமல் கொரோனா காலகட்டத்தில் தமிழக அரசு தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வராமல் இருந்த நிலையில் தற்போது சமீபத்தில் TNPSC குரூப் 2 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளிவந்தது.
TN Job “FB Group” Join Now
இதனை தொடர்ந்து குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகளும் வெளியாகி உள்ளது. இதனால் பட்டதாரிகள் மிகவும் ஆர்வமுடன் தேர்வுகளுக்கு படித்து வருகின்றனர்.அதனை தொடர்ந்து தற்போது TNPSC CESE தேர்வுகளை அறிவித்துள்ளது. மேலும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 39 ஆண்டுகள். மேலும் விண்ணப்பிக்க இருப்பவர்களின் கல்வி தகுதியாக ஏதேனும் ஒரு பிரிவில் பொறியியல் படித்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இன்று நகரம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் – பண்டிகை கொண்டாட தடை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
இந்த நிலையில் TNPSC சார்பில் பொறியாளர்களுக்கு ஒருங்கிணைந்த பொறியாளர் பணித் தேர்வு அறிவிக்கப்பட்டு இருந்தது. அதை தொடர்ந்து இந்த பணிக்கு 626 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இந்த தேர்வுகள் ஜூன் 26 ஆம் தேதி நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் தகுதியானவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று தான் கடைசி தேதி என்றும் கூறியுள்ளனர். அதன்படி, ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு ஜூலை 2ஆம் தேதி என்று மாற்றபட்டு உள்ளது.