சென்னை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஜூன் 11 முதல் சிறப்பு முகாம் ஏற்பாடு!
சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் ஜூன் 11 ஆம் தேதி முதல் ரேஷன் கார்டு சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் ரேஷன் கார்டு சம்மந்தப்பட்ட எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை பூர்த்தி செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு:
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக பல லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் ரேஷன் கடைகளில் கிடைக்கும் அன்றாடம் தேவையான பொருட்களை வாங்கி பயன் பெற்று வருகின்றனர். ரேஷன் பொருட்களை வாங்க தகுதியுள்ளவர்களின் அடிப்படையில் PHH, PHH – AYY, NPHH, NPHH – NC என பல ரேஷன் கார்டு அமைப்புடைய ரேஷன் அட்டைகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரேஷன் பொருட்கள் தங்கு தடையின்றி அனைத்து பொது மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். அவ்வப்போது ரேஷன் கார்டு விஷயத்தில் நடைபெறும் முறைக்கேடுகள் தகர்த்தப்படுகிறது.
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – FD வட்டி விகிதம் உயர்வு!
கைரேகை செலுத்திவிட்டு தான் ரேஷன் பொருட்களை வாங்க முடியும் என்கிற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அவ்வப்போது கைரேகை இயந்திரம் பழுதடைவதால் அதனை சீரமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்த பிரச்சனை அனைத்து மாநிலங்களிலும் நிகழ்ந்து வருகிறது. மேலும், ரேஷன் கார்டு விஷயத்தில் அவ்வப்போது சில சட்ட திட்டங்கள் புகுத்தப்பட்டு வருகிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது புதிதாக ரேஷன் கார்டுகள் மக்களுக்கு வழங்கப்படும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
தமிழகம் முழுவதும் புதிய ரேஷன் கார்டிற்காக கிட்டத்தட்ட 20 லட்சம் வரைக்கும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்களை ஆய்வு செய்து தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரேஷன் கார்டு விஷயத்தில் உள்ள குறைகளை கேட்டறிய மற்றும் ரேஷன் கார்டில் பெயரை சேர்த்தல், நீக்கம் ஆகிய செயல்பாடுகளை செய்ய சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் ஜூன் 11-ம் தேதி முதல் ரேஷன் கார்டு சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த மையம் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.