தமிழகத்தில் அமலுக்கு வரும் “புதிய பாரத எழுத்தறிவு திட்டம்” – அரசு தொடக்கம்!
தமிழகத்தில் உள்ள எழுத படிக்க தெரியாதவர்களின் எண்ணிக்கையை குறைக்க 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு, ‘புதிய பாரத எழுத்தறிவு’ திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை புதிதாக அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
புதிய பாரத எழுத்தறிவு திட்டம்:
தமிழக கல்வித்துறையானது பல புதுமையான திட்டங்களை அமல்படுத்தி மக்களுக்கு தரமான கல்வி வழங்கும் நோக்கில் இயங்கி வருகிறது. மேலும் கல்வித்துறை சிறு வயதில் படிக்க முடியாமல் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டு, தற்போது படிக்க விருப்பப்படும் பொதுமக்களுக்கு இலவச கல்வி வழங்கி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் கீழ், பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலமாக, “புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-27” என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த திட்டமானது, முற்றிலும் தன்னார்வலர்களைக் கொண்டு இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது நடப்பு 2022-23 ஆம் நிதியாண்டிலிருந்து 2026-27ஆம் நிதியாண்டு வரை ஐந்தாண்டு திட்டமாக செயல்படுத்தப்பட இருக்கிறது. புதிய பாரத எழுத்தறிவு திட்டம் முதற்கட்டமாக 38 மாவட்டங்களிலும் உள்ள, நகர்ப்புற வார்டுகள், கிராமங்கள் மற்றும் ஊரக பஞ்சாயத்துகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும் இந்த திட்டம் 5 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்க தெரியாத, ஐந்து லட்சம் பேருக்கு செயல்படுத்தப்பட இருக்கிறது. அது மட்டுமில்லாமல் பள்ளி வேலை நாட்களில் மட்டும், நாள் ஒன்றுக்கு, இரண்டு மணி நேரம் வீதம் ஆறு மாதத்தில், 200 மணி நேரம் கற்றல், கற்பித்தல் பணி கட்டாயம் நடத்தப்படும். இந்த திட்டம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உதவியுடன், குடியிருப்பு பகுதியில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்