ஸ்மார்ட்போன் பயனர்கள் கவனத்திற்கு – மோசடிகளை கண்டறியும் BeVigil செயலி!!

0
ஸ்மார்ட்போன் பயனர்கள் கவனத்திற்கு - மோசடிகளை கண்டறியும் BeVigil செயலி
ஸ்மார்ட்போன் பயனர்கள் கவனத்திற்கு - மோசடிகளை கண்டறியும் BeVigil செயலி
ஸ்மார்ட்போன் பயனர்கள் கவனத்திற்கு – மோசடிகளை கண்டறியும் BeVigil செயலி!!

ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மோசடிகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி, பயனர்களின் தரவுகள் திருடப்படுவதை தடுக்கிறது.

புதிய செயலி

இன்றைய அதிநவீன உலகில் நாம் இருக்கும் இடத்தில் இருந்தபடியே பல்வேறு சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு ஸ்மார்ட்போன்கள் உதவுகிறது. குறிப்பாக, கடைகளில் பொருட்கள் வாங்குவது முதல் பில் செலுத்துதல், டிக்கெட் பதிவு செய்வது, பணம் அனுப்புவது, பெறுவது போன்ற அனைத்தும் கையடக்க ஸ்மார்ட்போன்களுக்குள் அடங்கி இருக்கிறது. எந்த அளவுக்கு இந்த வசதிகள் அனைத்தும் எளிமையாக கிடைக்கிறதோ, அதே அளவுக்கு இதில் ஆபத்துகளும் அதிகமாக இருக்கிறது. ஏனென்றால், நாம் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு போன்கள் மூலம் பல்வேறு வகையான மோசடிகள் அரங்கேறி வருகிறது.

தமிழகத்தில் 53 பேருக்கு கொரோனா சிகிச்சை – இன்று புதிதாக 6 பேர் பாதிப்பு!!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இந்த மோசடிகளை தடுக்கும் விதமாக ‘BeVigil’ என்ற செயலி ஒன்று தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டிராய்டு ஸ்மார்ட் போன்களில் டேட்டா திருட்டு போன்ற மோசடிகளில் ஈடுபடும் செயலிகளை கண்டறிய இந்த ‘BeVigil’ செயலி உதவும் என அறிக்கைகள் கூறுகிறது. இது தவிர இந்த செயலி, பயனர்கள் உபயோகிக்கும் மற்ற செயலிகளின் பாதுகாப்பு தன்மை மற்றும் பயனர்களின் தரவு சேகரிப்பு குறித்த விரிவான தகவல்களை பதிவு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!