IRCTC ரயிலில் பயணம் செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு – புதிய ஏற்பாடுகள் அறிமுகம்!
தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால் மீண்டும் பழையபடி போக்குவரத்து சேவைகள் அனைத்தும் துவங்கப்பட்டுள்ளது. அதாவது ரயில் பயணிகளுக்கு இரவில் தூங்குவதற்கு தலையணைகள் மற்றும் போர்வைகள் வழங்கப்பட்டு வருகிறது.
IRCTC ரயிலில் பயணம்:
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக ரயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. தற்போது ஓரளவுக்கு கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால் மீண்டும் பழையபடி போக்குவரத்து சேவைகள் அனைத்தும் துவங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பேருந்து போக்குவரத்தை விட ரயில் போக்குவரத்து தான் செலவும் கம்மி என்பதால் பலரும் ரயிலில் தான் செல்ல விரும்புகின்றனர். தற்போது இந்திய ரயில்வே துறை டிக்கெட் முன்பதிவு விதிமுறைகளை மாற்றம் செய்துள்ளது.
தமிழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – இளைஞர்களே முந்துங்கள் !
முன்பை விட இப்போது குறைந்த நேரத்திலேயே ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். பழைய விதிமுறையில் இறங்க வேண்டிய இடத்திற்கான முகவரியை கொடுக்க வேண்டும். அதாவது IRCTC வெப்சைட் மற்றும் செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடத்திற்கான முகவரியை பதிவு செய்ய வேண்டும். ஆனால், தற்போது செல்ல வேண்டிய இடத்திற்கான முகவரியை கொடுக்க தேவையில்லை என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த புதிய விதிமுறையால் ரயில் பயணிகள் நிம்மதியடைந்துள்ளனர். இனிமேல் எந்த வித இடையூறும் இல்லாமல் விரைவில் டிக்கெட் புக்கிங் செய்து கொள்ளலாம். மேலும், கன்ஃபார்ம் டிக்கெட் கிடைக்கவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. இதுமட்டுமல்லாமல் IRCTC தற்போது ஏசி பெட்டிகளில் தலையணை போர்வை வழங்கும் வசதியையும் ரயில்வே மீண்டும் தொடங்கியுள்ளது. கொரோன பாதிப்பின்போது இந்த வசதி நிறுத்தப்பட்டன. தற்போது ரயில்களில் பயணிகளுக்கு இரவில் தூங்குவதற்கு தலையணைகள் மற்றும் போர்வைகள் வழங்கப்பட்டு வருகிறது.